📜 இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர் அருளிய அறநூல்
குறள் #50
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்
பொருள்: அறவழியில் இல்வாழ்க்கை நடத்தினால் போதும். துறவு வாழ்க்கையால் கிடைப்பது என்ன?
🔮 மேலும் சில குறள்கள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதன்மையானது போல், உலகிற்கு இறைவன் முதன்மையானவர்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்க வேண்டியவற்றை குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணல் கேணியில் தோண்டிய அளவு நீர் சுரக்கும். அதுபோல் மனிதருக்கு கற்ற அளவு அறிவு பெருகும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
செயல் உறுதி என்பது ஒருவனுடைய மன உறுதியே. மற்றவை எல்லாம் வேறானவை.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
நாம் எந்த உதவியும் செய்யாமல் இருக்கும்போதே பிறர் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் கொடுத்தாலும் ஈடாகாது.